Monday, May 30, 2011

கொல்லிமலையில் கோவில் கொண்டு அருள்புரியும் ஈசன்- அறப்பள்ளீஸ் வரர்.


அடர்ந்த காடுகளுடன் மூலிகைகள் நிறைந்து விளங்கும் கொல்லிமலையில் கோவில் கொண்டு அருள்புரியும் ஈசன்- அறப்பள்ளீஸ் வரர். இவர் சுயம்புவாகத் தோன்றியவர். அதன் சுருக்கமான வரலாறு...

முன்னொரு சமயம் கொல்லி மலையில் அறப்பள்ளியன் என்பவன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தன். மூலிகைகளைக் கண்டறியும் திறன் பெற்ற அவன், அங்கு மூலிகைகளைத் தேடி வரும் மருத்துவர்களுக்கு வழிகாட்டி யாகவும் இருந்தான். அப்படி வரும் மருத்துவர் கள் அவனுக்கு ஏதேனும் பொருள் கொடுப்பார் கள். அதனைக் கொண்டு அவன் வாழ்ந்து வந்தான்.

ஒரு மழைக் காலத்தின்போது, குடிசையில் அவன் வைத்திருந்த தேனும் தினைமாவும் தீர்ந்து விட்டன. வெளியில் சென்று உணவு தேட முடியாத நிலையில் பசியால் வாடிய அவன் இறைவனை வேண்டினான். அந்த வேளையில் அழுக்கு ஆடை அணிந்த ஒரு முதியவர் அவன் குடிசைக்கு வந்தார். மழையில் நனைந்து கொண்டி ருந்த அவரை உள்ளே அழைத்தான் அறப்பள்ளியன். உள்ளே வந்த முதியவர், ""கவலைப்படாதே! நானிருக்கும்போது உனக்கென்ன கவலை?'' என்றார்.

அவரை அதிசயத்துடன் பார்த்தான் அறப்பள்ளியன்.

01-09-09
Print | E-mail : Email this Article



சுகந்தன்

அடர்ந்த காடுகளுடன் மூலிகைகள் நிறைந்து விளங்கும் கொல்லிமலையில் கோவில் கொண்டு அருள்புரியும் ஈசன்- அறப்பள்ளீஸ் வரர். இவர் சுயம்புவாகத் தோன்றியவர். அதன் சுருக்கமான வரலாறு...

முன்னொரு சமயம் கொல்லி மலையில் அறப்பள்ளியன் என்பவன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தன். மூலிகைகளைக் கண்டறியும் திறன் பெற்ற அவன், அங்கு மூலிகைகளைத் தேடி வரும் மருத்துவர்களுக்கு வழிகாட்டி யாகவும் இருந்தான். அப்படி வரும் மருத்துவர் கள் அவனுக்கு ஏதேனும் பொருள் கொடுப்பார் கள். அதனைக் கொண்டு அவன் வாழ்ந்து வந்தான்.

ஒரு மழைக் காலத்தின்போது, குடிசையில் அவன் வைத்திருந்த தேனும் தினைமாவும் தீர்ந்து விட்டன. வெளியில் சென்று உணவு தேட முடியாத நிலையில் பசியால் வாடிய அவன் இறைவனை வேண்டினான். அந்த வேளையில் அழுக்கு ஆடை அணிந்த ஒரு முதியவர் அவன் குடிசைக்கு வந்தார். மழையில் நனைந்து கொண்டி ருந்த அவரை உள்ளே அழைத்தான் அறப்பள்ளியன். உள்ளே வந்த முதியவர், ""கவலைப்படாதே! நானிருக்கும்போது உனக்கென்ன கவலை?'' என்றார்.

அவரை அதிசயத்துடன் பார்த்தான் அறப்பள்ளியன்.

""என்ன அப்படிப் பார்க்கிறாய்? இந்த மலைப்பகுதியில் வசிப்பவர் களையெல்லாம் எனக்குத் தெரியும். மழைக்காலத்தில் உனக்கு எதுவும் கிடைக்காது. அதனால் நீ இந்தப் பகுதியை சீர்திருத்து. அப்பொழுது நீ எதிர்பாராத செல்வம் கிடைக்கும். ஆடி மாதம் பிறந்ததும் நான் சொன்னது போல் செய்'' என்றார் அவர்.

""தங்கம் கிடைக்குமா சாமி?'' என்றான் அறப்பள்ளியன்.

""அதைவிட உயர்ந்தது கிடைக்கும்'' என்று கூறிய அந்த முதியவர் தான் கொண்டு வந்திருந்த தினைமாவையும் தேனையும் அவனிடம் கொடுத்து விட்டு, ""வந்த வேலை முடிந்தது'' என்று சொல்லி, அவனை வாழ்த்தி விட்டு வெளியேறினார்.

அவர் சென்ற வழியைப் பார்த்தான் அறப்பள்ளியன். அவர் ஓரிடத்தில் நின்று அவனைத் திரும்பிப் பார்த்து கைகளைத் தூக்கி வாழ்த்தினார். அப்படியே மறைந்து போனார். வந்து போனவர் யாரோ ஒரு சித்தர் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்தான் அவன். பின்னர் அவன் குடிசைக்கு முன் இருந்த இடங்களை சீர் செய்யத் தொடங்கி னான். பெரிய கற்களை அகற்றி சமன்படுத்தி னான். ஒருநாள், அவன் கடினமான ஒரு பாறையை அப்புறப்படுத்தும்போது ஓர் ஒளி தோன்றியது. ஒளி தோன்றிய இடத்தில் உள்ள கற்களைக் கைகளால் அப்புறப் படுத்தும்போது ஒரு சிவலிங்கம் தானாக வெளிவந்தது! சிவலிங்கம் தோன்றிய நாள் ஆடி மாதம், பதினேழாம் நாள்! அப்போது மிகக் கடுமையாக மழை பெய்ய ஆரம்பித்தது. இடி மின்னலுடன் காற்றும் வீசியது. அதனால் அவன் குடிசைக்குத் திரும்பி விட்டான்.

மறுநாள் அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அன்று வந்த முதியவர் மீண்டும் அங்கு வந்தார்.

அவர் கால்களில் விழுந்து வணங்கியவன், நடந்ததைச் சொன்னான்.

""நீ மட்டும் மழையில் நனையாமலிருக்க குடிசையில் இருக்கிறாய். உன் தெய்வம் மட்டும் மழையில் நனையலாமா?'' என்று சித்தர் கேட்டதும், அவன் சிவலிங்கத்தைப் பார்த்தான். அங்கு சிவலிங்கத்தைச் சூழ்ந் திருந்த நீரில் சில மீன்கள் லிங்கத்தைச் சுற்றி வலமாக வருவதைப் பார்த்தான். உடனே தன் குடிசையின் ஒரு பகுதியைப் பிரித்து அங்கு பந்தல் போட்டான். அந்த சித்தர் பெருமான் மீன்கள் சுற்றி வந்த அந்த இடத்தில் கிழக்கு நோக்கி அந்தச் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த நாள் ஆடி பதினெட்டு. சிவ பூஜை செய்யும் வழிமுறைகளை அவனுக்குச் சொல் லிக் கொடுத்து விட்டுச் சென்றார் அந்தச் சித்தர்.

அறப்பள்ளியன் முதன் முதலில் அந்தச் சிவலிங்கத் தைக் கண்டதால் அந்தச் சிவலிங்கம் "அறப்பள்ளீஸ் வரர்' என்று பெயர் பெற்றது.

இதன் காரணமாகவே இப்பொழுதும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் தேதி களில் சிவன் தோன்றிய நாளாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று இத்திருக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் தனிப்பட்ட முறையில் யாகங்கள் செய்கிறார்கள். இத்திருக்கோவிலில் தினமும் முதல் மரியாதையாக இக்கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள ஸ்ரீசரப தீர்த்தத்தில் (ஆறு) வாழும் மீன்களுக்கே பூஜை செய்யப் படுகிறது. இதற்கும் ஒரு வரலாறு உண்டு.

பல வருடங்களுக்குமுன் இந்தக் கோவிலில் உள்ள பொருட்களைக் கொள்ளையடிக்க சிலர் வந்தார்களாம். அவர்கள் ஆற்றில் இறங்கி கோவிலை நோக்கி வரும்போது பெரிய பெரிய மீன்கள் துள்ளிக் குதிப்பதைக் கண்டனர். இந்த கொழுத்த மீன்களைப் பிடித்து சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும் என்று மீன்களைப் பிடித்து அறுத்து, அங்கேயே ஒரு குச்சியில் அந்த மீன்களைச் செருகி, தீ மூட்டி வாட்டியிருக்கிறார்கள். சாப்பிடுவதற்குப் பதமானதும், அப்பகுதியிலிருந்த தாமரை இலைபோல் இருந்த பெரிய இலையைப் பறித்து, அதில் தீயில் வாட்டிய மீன்களை எடுத்து வைத்திருக்கி றார்கள். அப்பொழுது தீயில் சுடப்பட்ட மீன்கள் முழு வடிவம் பெற்றுத் துள்ளிக் குதித்து ஆற்றில் விழுந்து மறைந்தனவாம். இதனைக் கண்ட அந்தத் திருடர்கள் அங்கிருந்து பயந்து ஓடி விட்டார்களாம். அதன் காரண மாகவே இங்கு மீன்களுக்குப் பூஜை செய்யப்படுகிறதாம்.

குழந்தைச் செல்வம் இல்லாதவர்களும் திரு மணத் தடை உள்ளவர் களும் மற்றும் பல துன் பங்கள் நீங்கவும் இங்கு வந்து வேண்டிக் கொண் டவர்கள், தங்கள் குறை தீர்ந்ததும் இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்கு மூக் குக் குத்தி சிறிய அணி கலன் அணிவித்து ஆற் றில் விடும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.

ஆற்றங்கரை அருகி லுள்ள இத்திருக்கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர். கிழக்கு பார்த்த (ராஜகோபுரம் இல்லாத) நுழைவாயில். கோவிலுக்குள் சென்றதும் கொடி மரம், பலி பீடம். அதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் சிவ பெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளார். இந்த நந்திக்கு மூன்று கால்கள் மட்டுமே உண்டு. பின்புற வலக்கால் இல்லை. இது பற்றியும் புராணக் கதை உண்டு.

இக்கோவிலிலிருந்து சுமார் பத்து மைல் தூரத்தில் புளியஞ்சோலை என்ற ஊர் உள்ளது. அங்கே விவசாயப் பெருங்குடி மக்கள் நிலக்கடலை பயிரிட்டிருக்கிறார்கள். அவ்வாறு பூக்கள் பூத்ததும், அதன் மணம் சுற்றுப்புறங் களில் மணக்கும். அவ்வாறு பூக்கள் பூத்தால் நிலத்தடியில் கடலை நல்ல முற்றிய நிலையில் உள்ளது என்பர். கடலைப் பூக்களின் மணம் நந்தியின் மனதைக் கவர்ந்தது. அதனால் நந்தி இரவு வேளையில் உயிர்பெற்று எழுந்து புளியஞ்சோலைக்குச் சென்று, கடலை வயலில் தன் கொம்புகளால் குத்திக் கிளறி கடலைக் காய்களை கொத்து கொத்தாகச் சுவைத்துவிட்டு விடிவதற்குள் கோவிலுக்கு வந்துவிடுமாம். இதுபோல் தொடர்ந்து நடக்கவே, விவசாயி கள் அந்தப் பகுதியை ஆட்சி புரிந்த குறு நில மன்னரிடம் கூறினர். அவர் இரண்டு வீரர்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி கண்காணிக் கச் சொன்னார். நள்ளிரவில் அங்கே வந்த நந்தியைக் கண்ட வீரர்கள் அதனை விரட்ட முயல, அது அந்த வீரர்களை முட்டுவதற்கு முயன்றது.

ஒரு வீரன் நீண்ட இரும்பு ஆயுதத்தால் நந்தியின் வலது பின்னங்காலை வெட்டி னான். கால் வெட்டப்பட்ட நந்தி கோவி லுக்கு ஓடிவந்து விட்டது. காலை இழந்த நந்தி இறைவனிடம் முறையிட, ""ஒருவர் வயலில் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்தது தவறு. நீ திருடித் தின்ற கடலைக்குத் தண்டனைதான் இது. இப்படியே இரு'' என்று சொன்னாராம் இறைவன்.

விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக்காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.

நந்தியெம்பெருமானைத் தரிசித்து விட்டு உள்ளே மகா மண்டபத்திற்குள் நுழையும்போது வாசல் பகுதியின் இரு பக்கங்களிலும் துவார பாலகர்கள்போல் சித்தர்கள் இருவர் காட்சி தருகிறார்கள்.

மகா மண்டபத்தையடுத்து அர்த்த மண்டபம். அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய கருவறை. சந்நிதியில் ஸ்ரீஅறப் பள்ளீஸ்வரர் அருள்புரிகிறார்.

ஒரு அடி அகலத்தில் மூன்றடி உயரத்தில் காட்சி தருகிறார். இவரை ஸ்ரீ தர்மகோசீஸ் வரர் என்றும் அழைப்பர். கருவறையின் வலப்புறம் விநாயகர் எழுந்தருளியுள்ளார். மூலவரைத் தரிசித்தபின் மகா மண்டபம் வந்தால் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அம்மன் "தாயம்மை' நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். அம்மனை ஸ்ரீதர்ம கோசீஸ்வரி என்றும் அழைப்பர். இந்த அம்பாள் காமாட்சியின் திருவுருவமாகப் போற்றப்படுகிறாள். லட்சுமி, சரஸ்வதி ஆகியோரும் இவளுக்குள் அடக்கம். எனவே இவளை வணங்கினால் முப்பெருந்தேவியரை ஒருசேர தரிசித்த பலன் கிட்டும்.

அம்பாள் எதிரே வாகனம் எதுவும் இல்லை. அம்பாளை வழிபட்டு சிறிது பின் நோக்கினால் மேலே விதானத்தில் அஷ்ட லட்சுமி சக்கரம் உள்ளது. ஸ்ரீசக்கரத்தைத் தரிசித்தபின் மகா மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாக வெளியே வந்தால் வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகனார் மயில்மீது அமர்ந்து தனிச் சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரது பார்வை அம்பாளை நோக்கி உள்ளது தனிச் சிறப் பாகும். கன்னி மூலையில் ஸ்ரீஔஷத கணபதி எனப்படும் வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

மேற்கு கோஷ்டத்தில் மகா விஷ்ணு எழுந்தருளி யுள்ளார். மகா விஷ்ணுவை நோக்கி மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இச்சந் நிதிக்கு அடுத்து வீணை யுடன் சரஸ்வதி எழுந்தருளி யுள்ளாள். இந்த சரஸ் வதிக்கு ஸ்ரீவித்யா சரஸ் வதி என்று பெயர்.

இக்கோவிலின் வடக்குப் பகுதியில் ஸ்ரீசர பேஸ்வர தீர்த்தக் கரை உள்ளது. கொல்லிமலை களில் தோன்றும் ஐந்து அருவிகள் ஒன்று சேர்ந்த புனித நீர் இதுவென்று சொல்லப்படுகிறது. ஸ்ரீசரபேஸ்வர தீர்த்தம் என்னும் இந்த ஆறு கரடுமுரடான கற்கள் உள்ள பகுதியில் ஓடி வந்து இங்கு சிறிய நீர்வீழ்ச்சிபோல் விழுகிறது.

இத்தீர்த்தக் கரைக்குக் கோவிலிலிருந்து சுமார் நூறு படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும். தீர்த்தக்கரையின் வலப்புறத்தில் தனி மண்டபத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.

இத்தீர்த்தத்தில் பல அரிய மூலிகைகள் கலந்திருப்பதால் இதில் நீராடினால் உடல் நலம் வளம் பெறும், சரும நோய்கள் நீங்கும், அனைத் துத் தோஷங்களும் விலகும் என்பர். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் ஆகாசகங்கை என்னும் தீர்த்தம் (நீர்வீழ்ச்சி) உள்ளது. கரடுமுரடான பாதையில் சென்று 1,200 படிகள் மேல்நோக்கிச் செல்ல வேண்டும்!

இந்தக் கொல்லிமலைப் பகுதியில் சித்தர்கள் பலர் வாசம் செய்வதாலும், அரிய மூலிகைச் செடிகள் இங்கு உள்ளதாலும் அதன் மணம் நம்மை ஒருநிலைப்படுத்தும் உணர்வை நாம் அறியலாம். மேலும், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள் இந்த மலையில் உள்ள அருவிகளில் நீராடுவார்களாம். அப்பொழுது, அவர்கள் மக்கள் உடல்நலம் வளம் பெற சில அரிய மூலிகைகளைப் பறித்து அரைத்து மந்திரங்கள் ஜபித்து, இந்த அருவி நீரில் கலப்ப தாக நம்பப்படுகிறது. அதனால், இந்த ஸ்ரீசர பேஸ்வர தீர்த்தத்தில் (ஆற்றில்) பௌர்ணமிக்கு அடுத்த நாள் நீராடுவது சிறப்பிக்கப்படுகிறது. இங்கு அருள்புரியும் ஈஸ்வரன் சக்தி வாய்ந்த ஞான மூர்த்தி. இவர் மூலிகை வாசம் கொண்டவராதலால் இவருக்குக் காட்டப்படும் தீபாராதனைத் தீபத்தில்கூட மூலிகை வாசத்தை உணரலாம்.

இக்கோவிலில் அமாவாசையன்று அன்னதானம் செய்தால் பித்ரு தோஷம் விலகும்; அவர் களின் ஆசி கிட்டும். இத்தல ஈசனையும் அன்னையையும் வணங் கினால் சுகமான வாழ் வும் எதிர்பாரா செல்வ மும் கிட்டும்!

நாமக்கல்லிலிருந் தும் சேலத்திலிருந்தும் கொல்லிமலைக்குப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

Links

திருமூலர் திருமந்திரம்,மற்றும் வரலாறு
அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில்

Friday, May 27, 2011

பெரியசாமி
சங்கிலி கருப்பு,முனி,பெரியசாமி,பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணன் தான் எங்கள் குல தெய்வம்.மாசி பெரியண்ணன் கோவில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மாசிக்குன்றில் அமைந்துள்ளது.சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடி உயரமுள்ள வேங்கை என்னும் மிருகவாகனத்தின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் பெரியண்ணன்.திருச்சி,நாமக்கல்,துறையூர் என பல மாவட்டங்களில் பெரியண்ணன் கோவில்கள் இருந்தாலும்.இங்குள்ளதுதான் மூலம் என்கின்றனர்.மற்ற இடங்களின் சாமியின் உத்திரவுவாங்கி அடிமண் எடுத்து கோவில்கள் எழுப்பப் பட்டிருக்கின்றன.

சோழிய வெள்ளாளர் சமூகத்திற்கும், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்திற்கும் பெரியண்ணன் குலதெய்வமாக விளங்குகிறார்.

கொல்லி மலை-

நாமக்கல் மாவட்டத்தில் பரந்து விரிந்திருக்கின்ற பெரிய மலை கொல்லி மலை.கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடிக்கும் மேல் உயரம் கொண்டதாக உள்ளது.பசுமையை தன்னுள் தக்க வைத்துக்கொண்டு அளவிடமுடியாத அளவிற்க்கு மகிமைகள் கொண்டுள்ளது.எங்கேயும் கிடைக்காத மூலிகைகள் பல இங்கு கிடைக்கின்றன.இங்கே மின்சாரமே இல்லாத சில கிராமங்களில் கூட இருக்கின்றன என்னுஞ் செய்தி வியப்பை தருகின்றது.இதன் பெருமைகளை முன்பே நாம் கண்டுவிட்டோம்.

மாசி குன்று-

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் எட்டு நூற்றாண்டுகளுகும் முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர்.அது மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.அதன் வரலாற்றை கேட்டறிய சற்று சிரமமாக இருந்தது.எட்டு நூற்றாண்டுகளை கடந்து இன்றும் அக்கோவில் சிறப்பாக இருக்கின்றது,என்ற செய்தி கேட்டால் உச்சி சிலிர்க்கின்றது.அந்த வரலாற்று கதை இதுதான்.


காசியிலிருந்து பார்வதி தேவியும்,சிவனும் தென்திசை நோக்கி வந்தனர்.பார்வதி தேவி காமாட்சியாகவும்,சிவன் பெரியண்ணனாகவும் மனித உருவெடுத்தனர்.
(சிலர் பெரியண்ணனை சிவனின் வழிதொன்றலாகவே கருதுகின்றார்கள்.அவரே தம் மனைவி பார்வதி தேவியுன் காசியிலிருந்து கொல்லி மலைக்கு வந்தார் என்றும் கூறுகின்றனர்).துரையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார்.பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின் பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது.அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு சென்றார் பெரியண்ணன்.அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது.இது போல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார்.

மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர்.அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்து வருகிறார்.

வேண்டுதலுக்காக வேலில் கோழிகள்

மூலிகை குச்சிகள்

மூலிகை


மாசி பெரியசாமி கோவில்

அன்ன காமாட்சியம்மன் கோவில்

கல்லாத்துக் கோம்பு-

இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதயாகும்.வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்கு சென்றார்.காமாட்சியின் தெய்வதன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும் செய்ய வில்லை.கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைக்கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற,பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில் தங்கிவிட்டார்.

கொல்லிப் பாவை-

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம்.சிவனுக்கு கால பைரவன் காவல் காப்பது போல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல்.ஏதேனும் தீய எண்ணங்களை மனதில் வைத்து வருபவர்களை தன்னுடைய மாய சொருபங்களால் மயக்கி கொன்றுவிடுவாள் இந்த பாவை.பாவை என்றால் பெண் என்று பொருள். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.இதன் ஆலையம் கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது.தற்போது கீரம்பூர் என்னும் கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.

வேண்டுதல்கள்-

1. பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டி பெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
2. தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில் குத்துகின்றனர்.
3. உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
4. ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
5. படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
6. கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும் செய்கிறார்கள்.
7. மணிகளை கட்டுதல்,குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல்,வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

கிடைக்கும் பொருட்கள்-

மூலிகை மலை என்பதால் ஏகப்பட்ட மூலிகைகள் கிடைக்கின்றன.பல் வலிக்கு,மன நோய்க்கு என மூலிகைகளை தருவதோடு பயண்படுத்தும் முறையையும் தெளிவாக கூறுகின்றனர்.

ஆண்மைக்குறைவு, வெள்ளைப் படுதல் போன்றவைகளுக்கும் இங்கே மூலிகைகளை விற்கின்றார்கள்.

முக்கனிகளும் கிடைக்கின்றன.மலை வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
அசைவப்பிரியர்களுக்கு இங்கே கொண்டாட்டம் அதிகம்,இங்குள்ள ஆடுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதாய் கூறுகின்றனர்.

புதிர்-

சிலர் பெரியண்ணனை சிவனின் வழிதொன்றலாகவே கருதுகின்றார்கள்.அவரே தம் மனைவி பார்வதி தேவியுன் காசியிலிருந்து கொல்லி மலைக்கு வந்தார் என்றும் கூறுகின்றனர். பெரியண்ணனின் வழிபாட்டு முறைகள் சிவ வழிபாட்டை சார்ந்தே உள்ளது.சிவராத்திரி மகிமையாக கொண்டாடப் படுகின்றது.திருநீரு பிரசாதமாக தரப்படுகின்றது.நமது மரபுப் படி திருமணம் ஆன பெண் கணவனோடு மட்டும் தான் வெளியே வருவாள்.எனவே அவர்கள் சிவனும் பார்வதியும் என்றே அடித்துக் கூறுகின்றனர்.மேலும் சித்தர்கள் வாழ்வதாகவும்,பெரியண்ணனை வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.

சித்தர்கள்-

சிவம் இருக்கும் இடத்தில் சித்தர்கள் இல்லாமலா.இங்கு கிடைக்கும் மூலிகைகளுக்காக சித்தர்கள் அடிக்கடி வந்து போகின்றார்கள் என்கின்றனர் சித்தர்களை பார்த்ததாக சொல்லும் சில கிராமத்துவாசிகள்.பறந்து விரிந்து கிடக்கின்ற கொல்லிமலையில் சித்தர்கள் குகைகளையும் அவர்கள் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்களையு;ம் ஒரு தனியார் தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வது எப்படி-

நாமக்கலிருந்து அறப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில் சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடக்க செல்ல வேண்டும்.

அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்ல வேண்டும்.இந்த பாதையில் ஓடையொன்று உள்ளது.அதன்பிறகு இருக்கும் வழுக்குப் பாறையை தாண்டினால் வந்துவிடும் பெரியண்ணசாமி கோவில்.

இதைப் படிக்கும் அன்பர்கள் பெரியண்ணன்,காமாட்சி,கருப்புசாமியின் குல வாரிசாக இருந்தால் முடிந்த மட்டும் கொல்லிமலைக்கு சென்று சாமியை தரிசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

காமாட்சி, பெரியசாமி
கொல்லி மலை
கொல்லி மலையின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மலைகளின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.மலைத் தலம் என்பதே மிக மிக வினோதமான அமைப்பைக் கொண்டது.தரைகளில் இருக்கும் தலங்களுக்கும் மலையில் இருக்கும் தலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.பொதுவாக மலைகள் என்பதே மிகவும் சக்தி வாய்ந்தது.

சூரிய கதிர்களும்,சந்திர கதிர்களும் மற்ற கிரங்கங்களின் கதிர்களும் மலைப் பிரதேசங்களில் அதிகமாக பரவுகின்றன.சூரிய கதிர்களை மட்டுமே நம்மால் உணர முடிவதால் தான்,மலைப் பிரதேசங்களின் குளுமையை அனுபவிக்கின்றோம்.இது எளிதான ஒரு உதாரணம்.நம்மால் உணரவே முடியாத பல விஷயங்கள் மலைகளில் புதைந்து கிடக்கின்றன.மனதினை அடக்க எளிதாக அது கட்டுப்படுகின்ற சூழல் அங்கு நிலவுகின்றது.அதற்கு காரணம் கதிர்வீச்சுகள் தான்.தரைப் பகுதியில் மனதினை அடக்குவது மிகக் கடினம்.இதை புரிந்து கொண்ட பெரும் மாகான்கள் மலைகளிலேயே தங்கி விடுகின்றனர்.சித்தர்கள் மலைகளில் உலவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மலைகளில் உள்ள தட்பவெப்பம் மிகவும் இன்றியமையாதது.வடக்கு பகுதியில் இருக்கும் மலைகளைப் போல் மிக உயரமானது இல்லை நம்முடைய கொல்லிமலை.அதிக வெப்பமும்,அதிகமான குளிரும் இல்லாமல் அங்கு உள்ள அருமையான தட்பவெப்பம் மூலிகைச் செடிகள் வளருவதற்கு காரணமாக இருக்கின்றன.பல வகையான செடிகள் நம்மால் இன்று அடையாலம் காணப்பட்டாலும் சில செடிகளை பயண்படுத்துவதுப் பற்றி சித்தர்களுக்குத் தான் தெரியும்.
கொல்லிமலையின் ஒரு பகுதி


மூலிகைச் செடிகள் என்றவுடன் ஏதோ நமக்கு தெரியாத ஒன்றென எண்ணிவிட வேண்டாம்.நம்முடைய உணவுகளில் இருக்கும் மிளகு,கிராம்பு,சோம்பு போன்றவைகளும் மூலிகைகள் தான்.சித்தர்கள் தந்ததுதான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த மருத்துவம்.உணவே மருந்து என்று அறிந்து வைத்திருந்தனர் சித்தர்கள்.அத்துடன் நில்லாமல் எல்லோருக்கும் பயன்படும்படி எழுதியும் வைத்துள்ளனர்.இந்த மூலிகைச் செடிகளுக்காக சித்தர்கள் கொல்லி மலையில் இன்றும் உலாவுவதாக சொல்லுகின்றனர்,கிராமத்து வாசிகள்.

கொல்லிமலை முக்கனிகள் எனப்படும் வாழை,பலா,மா என எல்லாமும் விளைகின்ற இடமாக இருக்கின்றது.அதிலும் இங்கு வளர்கின்ற வாழைப் பழம் மிகவும் சுவைப் பொருந்தியதாக உள்ளது.மழைப் பிரதேசங்களில் காற்றும் நீரும் மிக தூய்மையானது.இந்த நீரிலும்,காற்றிலும் மூலிகைகளின் தன்மையும் சேர்ந்திருக்கின்றன.மலைகளில் பெய்கின்ற மழையானது பற்பல மூலிகைளில் பட்டு ஒன்று சேர்ந்து அருவிகளிலும்,ஊற்றுகளிலும் கலக்கின்றது.இதனால் பல மூலிகைகளின் திறன்களை அது கொண்டுள்ளது.

இது நீரின் சிறப்பென்றால் காற்றுக்கோ அதைவிட சிறப்பு அதிகமாக உள்ளது.மலை உச்சியிலிருக்கும் ஆலயத்தின் மணி ஓசையானது அடிவாரம் வரை அதிர்வுகளை உண்டாக்க கூடியது.இந்த அதிர்வுகள் மனதில் ஒருவித நிம்மதியை கொடுக்கின்றன.அதனால் தான் மலையில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு வரவேற்பு அதிகமானதாக காணப்படுகின்றது.

ஒரு மலையின் சிறப்புகளுக்கும் இன்னொரு மலையின் சிறப்புகளுக்கும் வேறுபாடு காணப்படும்.இதற்கு காரணம் அதன் உயரங்களிளும் அமைப்புகளிலும் காணப்படும் ஏற்ற தாழ்வுகள்.இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால்தான் நம்முடைய முன்னோர்கள் மலைகளில் ஆலயங்களை அமைத்துள்ளனர்.பக்தியோடு செல்வதானாலும்,இயற்கையை ரசிப்பதற்காக செல்வதானாலும் கொல்லிமலை மிகச் சிறந்த இடம்.


ஒற்றையடிப் பாதை இருபுறமும் செடிகள்



கொல்லி மலை-மாசிக் குன்று



கொல்லி மலையில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்கள் பத்து இடங்களை பட்டியலிடுகின்றேன்.கொல்லி மலைக்கு நீங்கள் உல்லாசப் பயணம் செய்வதானால் கீழிருக்கும் எந்த இடங்களையும் மறந்து விடாதீர்கள்.

1.பெரியசாமி கோவில்.
2.அரப்பள்ளீஸ்வரர் கோவில்.
3.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.
4.எட்டுக்கை அம்மன்.
5.17 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில்.
6.வாசலூர்ப்பட்டி படகு சவாரி.
7.ராக்பில்லர் வியூ பாய்ன்ட்.
8.சோழக்காடு தொலைநோக்கு கருவி.
9.2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி.
10.வள்ளல் ஓரியின் சிலை.

மாசி பெரியண்ண சுவாமி - வைரசெட்டிபாளையம்









மாசி பெரியண்ண சுவாமி - வைரசெட்டிபாளையம்



பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆன்மீகச் சுற்றுலாவாக குடும்பத்துடன் செல்லும் போது, கோவில்களின் வரலாறுகளையும், சிற்பக் கலையும் வெகுவாக ரசிப்போம்.

பிச்சாயி கதை நடந்த இடம் துறையூரி்ல் இருக்கும் பெருமாள் மலையின் அடிவாரம் என்று வலைப்பூவில் படித்திருந்ததை சொன்னேன். சரி முதலில் அங்கு செல்லாம் என்று சொன்னார்கள். அடுத்த சிலமணி நேரங்களில் பிச்சாயி,வீரய்யா கோவிலில் இருந்தோம்.

பிச்சாயி கதையும், கோவில் அமைப்பு பற்றியும் தனித்தனி இடுகையில் சொல்கிறேன். முக்கியமாக சொல்லப்பட வேண்டியது அழகு நிறைந்த அந்த குதிரைகள். அடுத்ததாக பெருமாள் மலையில் பெருமாளின் தரிசனம். தென் திருப்பதி என அழைக்கப்படுகிறதாம் பெருமாள் மலை. பிரகாரச் சிற்பங்கள் அழகாக இருந்தன. அதைவிடவும் சொல்லப்பட வேண்டியது. அங்கே இருந்த கருப்புசாமி சந்நதியைதான். பெருமால் கோவிலில் விபூதி பிரசாதத்துடன் ஒரு அடி குதிரையில் ஒய்யாரமாக இருக்கிறார். எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

வியப்பு தீருவதற்குள் வைரசெட்டி பாளையத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் இருந்தோம். அங்கே இருக்கும் மாசி பெரியண்ணன்தான் எங்கள் குலதெய்வம். சிலர் அவரை சிவன் ரூபம் என்கின்றார்கள். சிலர் பெருமாள் என்கின்றார்கள். சைவ வைணவ பிரட்சனையில் எங்கள் சாமியின் தலையில் நாமமும், பட்டையும் மாறி மாறி விழுந்து கொண்டிருப்பது ஒரு பெரும்கதை.

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி
“ஐயா, பெரியசாமி உன்னை எல்லா இடங்களுக்கும் கொண்டுப் போக அருள் செய்.

அருகிலிருக்கும் கல்லாத்துக் கோம்பைக்கு சென்றோம். அது பெரியசாமிக்கென தனியாக கோவில் இருக்கும் இடம். அங்கு பெரியசாமிக்கு சைவ வைணவ பிரட்சனையோடு சாதிப் பிரட்சனையும் உண்டு. ஒருபுறம் பழைய கோவில், அங்கு பூசாரி சோழிய வெள்ளாளர். இன்னொரு புறம் புதிய கோவில் அங்கு முத்தரையர் பூசாரி. ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மறுகோவிலுக்கு செல்வதில்லை. கடவுளுக்கே இந்த நிலையா என்று நொந்து கொண்டேன்.

நாமக்கல் அருகிலிருக்கும் எட்டுகை அம்மன் கோவிலுக்கு செல்லாம் என்றேன். எட்டுகை அம்மனை கொல்லிமலையில் தரிசித்திருக்கிறேன். ஆனால் கீரம்பூரில் அத்தனை பெரிய கோவிலில் குடிகொண்டிருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை. ஏக்கர் கணக்கில் தங்கள் குலதெய்வத்திற்கு கோவிலை அமைத்திருக்கின்றார்கள் கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர்.

குலதெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவாகத்தான் இருக்குமென நினைத்தேன். செம்பூதத்தான் பண்ணை குலமக்கள் கோவிலில் ஓர் அறிவிப்பு பலகையை வைத்திருந்தார்கள். தங்களுடைய குழந்தைகளின் கல்விக்கு உதவும் நோக்கத்தில் அவர்களின் செயல்பாடு பிரம்மிக்க வைத்தது. என்னுடைய அப்பா அதனை பாராட்டிக் கொண்டே இருந்தார். இதனைப் பற்றியும் தனி இடுகையில்.


ஊருக்கு செல்லும் வழியில் வலையப்பட்டிக்கு சென்றோம். அங்குள்ள குன்னிமரத்தான் கோவிலுடன் எங்களுடைய முதல்நாள் பயணம் முடிவடைந்தது.

சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வம்v

சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வம்

மாசி பெரியண்ணன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிக்குன்றில் அமைந்துள்ளார். சங்கிலிகருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடிஉயரமுள்ள வேங்கைஎன்னும் மிருகவாகனத்தின் மீது பெரியண்ணன்அமர்ந்திருக்கிறார். கொங்கு மற்றும் சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வமாகவிளங்குகிறது.


வரலாறு

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.

காசியிலிருந்து பார்வதி தேவியும், சிவனும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், சிவன் பெரியண்ணனாகவும் மனிதஉருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில்காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின்பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது. அந்த குன்றிலிருந்து அடுத்தகுன்றுக்கு சென்றார் பெரியண்ணன். அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது. இதுபோல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார். மனிதஉருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்துவருகிறார்.

கல்லாத்துக் கோம்பு


இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதியாகும். வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்குசென்றார். காமாட்சியின் தெய்வத் தன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைக் கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற, பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில் தங்கிவிட்டார்.
கொல்லிப் பாவை

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம். சிவனுக்குக் கால பைரவன் காவல் காப்பதுபோல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள். இதன் ஆலயம் கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது. தற்போது கீரம்பூர் என்னும் கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.

இக்கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.

இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி வருமாறு ;- இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.

இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.

கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.
திருநாவுக்கரசு சுவாமிகள்

கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.


வேண்டுதல்கள்

* பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டிபெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
* தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில்குத்துகின்றனர்.
* உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
* ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
* படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
* கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும்செய்கிறார்கள்.
* மணிகளை கட்டுதல்,குழந்தை வரம் வேண்டி தொட்டில்கட்டுதல்,வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

செல்லும் வழி


நாமக்கலிருந்து அறப்பள்ளீசுவரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில்சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடக்க செல்ல வேண்டும். அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்லவேண்டும். இந்த வழியில் ஓடையொன்று உள்ளது. அதன்பிறகு இருக்கும்வழுக்குப் பாறையை தாண்டினால் பெரியண்ணசாமி கோவில் வருகிறது.

சோழிய வெளாளர்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம். 'பிள்ளை' என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டியவேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடிவேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்ட சூழலில், சித்திரை மேழி பெரிய நாட்டார் அமைப்பும் கலைக்கப்பட்டுவிட்டது எனத்தெரிகின்றது. கைக்கோளர், அகம்படி முதலியார் போன்ற சாதிகள் சித்திரை மேழிபெரிய நாட்டார் அணியில் சேராமல் தங்களை வேளாளர் எனஅழைக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். உடையார், நயினார், மூப்பனார் ஆகிய சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பிலிருந்துதங்களை விடுத்தபின், பார்கவ குல சத்திரியர் என அழைத்துக் கொண்டனர். பண்டைய அகம்படி சாதிகளில் சோழிய வேளாளர், கார்காத்த வேளாளர், இசைவேளாளர், வீரக்கொடியார் ஆகிய சாதிகள் மட்டுமே வேளாளர் சமூகத்தில் இடம்பெற்று விட்டனர். இவர்களையே உயர்குடி வேளாளராக நச்சினார்க்கினியர்குறிப்பிடுகின்றார்.

சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக்கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது.

வட இந்தியாவில் யது குலத்தின் கிளைக்குடியாகக் கூறப்படும் ஐந்துபிரிவுகளைக் கொண்ட தாளஜங்கா மரபினரை ஒத்தவராவர் இவர். அக்குலத்தோன்றலான ஏயர் கோமான் கலிக்காம நாயனார் வம்சத்தினரும் இன்று சோழியவேளாளர் சாதியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம்அறியமுடிகின்றது.

மற்றொரு செய்தியின் படி பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனதுகாவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்துவரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள்மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாதுஅவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாதசாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்துவர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள்இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன்முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாததனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகலஅறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்துவைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழியவேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்குமணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன்நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்துகௌரவித்தாராம்.

“பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அயலிலிருந்த அதன் சகோதர அரசுகளானசேர, பாண்டிய அரசுகளை வெற்றிகொண்டு சென்னையின் சுற்றுப்புறத்திலிருந்துகுமரி முனை வரை மேலாட்சி செலுத்தியது. அந்தக் காலப்பகுதிக்குப் பின்னர்தென்னிந்தியாவின் தமிழ் முகம்மதியர்கள் ‘சோழிய முகம்மதியர்கள்’ என்றுஅறியப்பட்டனர்@ அல்லது பொதுவாக ‘சோழியர்’ (சோழதேசம் என்றுஅழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள்) என அறியப்பட்டதில் சந்தேகமில்லை. இன்றுவரை ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் தென்பாகத்தைச் சேர்ந்த தம்மதத்தினை ‘சோழிய’ என்றே அழைக்கின்றார். ஏனெனில், சோழியர்களில் மிகப்பெரும்பான்மையோர் மதத்தைத் தவிர, மொழி, பொதுத் தோற்றம், சமூகவழக்கங்கள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் தமிழர்களாக இருக்கின்றனர்”


சோழியர் எனும் சொல்லானது “சோழதேசம்” என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின்மக்களைக் குறிக்கின்றது. வின்ஸ்லோ என்பவர் தமது தமிழ் ஆங்கிலஅகராதியில் பின்வருமாறு விளக்கம் தருகிறார். சோழியர் – சோழம் எனும் அவர்களது தேசப் பெயரால் வழங்கப்பட்ட, எத்தனையோ குலங்களிருந்து ஆன ஒரு வகுப்பினர். பிராமணர், வேளாளர் முதலியவரிலொரு பிரிவார் சோழியப்பார்ப்பார் சோழிய வேளாளர்........ “சோழியப் பிராமணரும் சோழிய வேளாளரும்போல் சோழிய முகம்மதியர்களும் உள்ளனர். எல்லோரும் சோழ தேசத்தைச்சேர்ந்தவர்கள். ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் அவரது தென்பகுதி மதத்தோழர் ஒருவரைச் “சோழிய” என்று அழைப்பதற்குக் காரணம், அவர் சோழதேசத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியா அந்தப்பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில்தென்னிந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுத்து வந்த தமிழர்கள், முன்னர்காட்டியதுபோல் சோழியர் என்றே அழைக்கப்பட்டனர்.


'சோழிய வெள்ளாளர்' போன்று பிள்ளை உட்பிரிவினை ஒத்த, ஆனால் சிறிதுவேறுபட்ட 'சோழியர் இல்லம்' என்ற பிரிவு 'இல்லத்துப்பிள்ளைமார்' பிரிவின் ஓர்அங்கமாக உள்ளது.

சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும்எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப்பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ளகி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச்சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில்இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர்சமூகத்திலும் பளிங்கில்லம், மஞ்சநாட்டு இல்லம், தோரணத்தில்லம், மூட்டில்லம், சோழிய இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது இங்கேகுறிப்பிடத்தக்கது.

சோழப் பேரரசர் முடிசூடும் தலமாகவும் குலத் தெய்வ திருத்தலமாகவும் சிதம்பரம் இருந்ததைப் போன்று கொங்கு சோழ அரசர்களுக்குக் கோநகராகவும் முடிசூடும் தலமாகவும் விளங்கியது பேரூர் ஆகும்.இதிலிருந்தே கொங்குச்சோழர்களின் அரசகுலப் படையாகிய எழுநூற்றுவர்க்கும், சோழியர் பிரிவைச்சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளைஉய்த்துணரலாம்.மேற்குறிப்பிட்ட சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில்சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம்திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச்சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில்பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

கொல்லி மலையின் சிறப்புகளை

கொல்லி மலை
கொல்லி மலையின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மலைகளின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.மலைத் தலம் என்பதே மிக மிக வினோதமான அமைப்பைக் கொண்டது.தரைகளில் இருக்கும் தலங்களுக்கும் மலையில் இருக்கும் தலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.பொதுவாக மலைகள் என்பதே மிகவும் சக்தி வாய்ந்தது.

சூரிய கதிர்களும்,சந்திர கதிர்களும் மற்ற கிரங்கங்களின் கதிர்களும் மலைப் பிரதேசங்களில் அதிகமாக பரவுகின்றன.சூரிய கதிர்களை மட்டுமே நம்மால் உணர முடிவதால் தான்,மலைப் பிரதேசங்களின் குளுமையை அனுபவிக்கின்றோம்.இது எளிதான ஒரு உதாரணம்.நம்மால் உணரவே முடியாத பல விஷயங்கள் மலைகளில் புதைந்து கிடக்கின்றன.மனதினை அடக்க எளிதாக அது கட்டுப்படுகின்ற சூழல் அங்கு நிலவுகின்றது.அதற்கு காரணம் கதிர்வீச்சுகள் தான்.தரைப் பகுதியில் மனதினை அடக்குவது மிகக் கடினம்.இதை புரிந்து கொண்ட பெரும் மாகான்கள் மலைகளிலேயே தங்கி விடுகின்றனர்.சித்தர்கள் மலைகளில் உலவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மலைகளில் உள்ள தட்பவெப்பம் மிகவும் இன்றியமையாதது.வடக்கு பகுதியில் இருக்கும் மலைகளைப் போல் மிக உயரமானது இல்லை நம்முடைய கொல்லிமலை.அதிக வெப்பமும்,அதிகமான குளிரும் இல்லாமல் அங்கு உள்ள அருமையான தட்பவெப்பம் மூலிகைச் செடிகள் வளருவதற்கு காரணமாக இருக்கின்றன.பல வகையான செடிகள் நம்மால் இன்று அடையாலம் காணப்பட்டாலும் சில செடிகளை பயண்படுத்துவதுப் பற்றி சித்தர்களுக்குத் தான் தெரியும்.



கொல்லிமலையின் ஒரு பகுதி


மூலிகைச் செடிகள் என்றவுடன் ஏதோ நமக்கு தெரியாத ஒன்றென எண்ணிவிட வேண்டாம்.நம்முடைய உணவுகளில் இருக்கும் மிளகு,கிராம்பு,சோம்பு போன்றவைகளும் மூலிகைகள் தான்.சித்தர்கள் தந்ததுதான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த மருத்துவம்.உணவே மருந்து என்று அறிந்து வைத்திருந்தனர் சித்தர்கள்.அத்துடன் நில்லாமல் எல்லோருக்கும் பயன்படும்படி எழுதியும் வைத்துள்ளனர்.இந்த மூலிகைச் செடிகளுக்காக சித்தர்கள் கொல்லி மலையில் இன்றும் உலாவுவதாக சொல்லுகின்றனர்,கிராமத்து வாசிகள்.

கொல்லிமலை முக்கனிகள் எனப்படும் வாழை,பலா,மா என எல்லாமும் விளைகின்ற இடமாக இருக்கின்றது.அதிலும் இங்கு வளர்கின்ற வாழைப் பழம் மிகவும் சுவைப் பொருந்தியதாக உள்ளது.மழைப் பிரதேசங்களில் காற்றும் நீரும் மிக தூய்மையானது.இந்த நீரிலும்,காற்றிலும் மூலிகைகளின் தன்மையும் சேர்ந்திருக்கின்றன.மலைகளில் பெய்கின்ற மழையானது பற்பல மூலிகைளில் பட்டு ஒன்று சேர்ந்து அருவிகளிலும்,ஊற்றுகளிலும் கலக்கின்றது.இதனால் பல மூலிகைகளின் திறன்களை அது கொண்டுள்ளது.

இது நீரின் சிறப்பென்றால் காற்றுக்கோ அதைவிட சிறப்பு அதிகமாக உள்ளது.மலை உச்சியிலிருக்கும் ஆலயத்தின் மணி ஓசையானது அடிவாரம் வரை அதிர்வுகளை உண்டாக்க கூடியது.இந்த அதிர்வுகள் மனதில் ஒருவித நிம்மதியை கொடுக்கின்றன.அதனால் தான் மலையில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு வரவேற்பு அதிகமானதாக காணப்படுகின்றது.

ஒரு மலையின் சிறப்புகளுக்கும் இன்னொரு மலையின் சிறப்புகளுக்கும் வேறுபாடு காணப்படும்.இதற்கு காரணம் அதன் உயரங்களிளும் அமைப்புகளிலும் காணப்படும் ஏற்ற தாழ்வுகள்.இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால்தான் நம்முடைய முன்னோர்கள் மலைகளில் ஆலயங்களை அமைத்துள்ளனர்.பக்தியோடு செல்வதானாலும்,இயற்கையை ரசிப்பதற்காக செல்வதானாலும் கொல்லிமலை மிகச் சிறந்த இடம்.


ஒற்றையடிப் பாதை இருபுறமும் செடிகள்



கொல்லி மலை-மாசிக் குன்று



கொல்லி மலையில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்கள் பத்து இடங்களை பட்டியலிடுகின்றேன்.கொல்லி மலைக்கு நீங்கள் உல்லாசப் பயணம் செய்வதானால் கீழிருக்கும் எந்த இடங்களையும் மறந்து விடாதீர்கள்.

1.பெரியசாமி கோவில்.
2.அரப்பள்ளீஸ்வரர் கோவில்.
3.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.
4.எட்டுக்கை அம்மன்.
5.17 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில்.
6.வாசலூர்ப்பட்டி படகு சவாரி.
7.ராக்பில்லர் வியூ பாய்ன்ட்.
8.சோழக்காடு தொலைநோக்கு கருவி.
9.2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி.
10.வள்ளல் ஓரியின் சிலை.